சாலையின் குறுக்கே மாடு புகுந்ததால் விபத்து ஆட்டோ கவிழ்ந்து கணவன், மனைவி காயம்: நெல்லையில் நிலவும் தொடர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை

திருநெல்வேலியில் சாலையின் குறுக்கே மாடு புகுந்ததால் அதன் மீது மோதிய ஆட்டோ கவிழ்ந்தது. இதில், கணவன், மனைவி பலத்த காயம் அடைந்தனர். சாலையில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருநெல்வேலி, குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி, 2 குழந்தைகளுடன் திருநெல்வேலி தெற்கு புறவழிச் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் குறுக்கே மாடு புகுந்துள்ளது. அதன் மீது மோதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சக்திவேல் மற்றும் அவரது மனைவி படுகாயம் அடைந்தனர். 2 குழந்தைகள் காயமின்றி தப்பினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments