
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. அண்ணாமலை உச்சியில் கடந்த 19-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத் தரிசனத்தை 3-வது நாளாக நேற்றும் பக்தர்கள் தரிசித்தனர். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை என கூறப்பட்டு, மாட வீதியில் 10 நாட்கள் நடைபெறக் கூடிய சுவாமி உற்சவம் மற்றும் மகா தேரோட்டம், தெப்பல் உற்சவம், சுவாமியின் கிரிவல பவனி ஆகியவற்றுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments