காரைக்குடி அருகே தகுதி அட்டை வழங்கப்பட்ட பிறகும் 11 ஆண்டுகளாக வீடு கேட்டு அலையும் நரிக்குறவர்கள்

காரைக்குடி அருகே அரசு அதிகாரிகள் 2010-ல் கொடுத்த தகுதி அட்டைகளுடன் வீடு கேட்டு 11 ஆண்டுகளாக 80 நரிக்குறவர்கள் குடும்பத்தினர் அலைந்து வருகின்றனர்.

காரைக்குடி அருகே சங்கராபுரம் வேடன் நகரில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரம், குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இங்குள்ள 80 குடும்பங்களுக்கு சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் 2010-ம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத் தில் கான்கிரீட் வீடு பெறுவதற்கான தகுதி அட்டை வழங்கப்பட்டது. இந்த அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ஓராண்டுக்குள் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 11 ஆண்டுகளாகியும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qUQxhC

Post a Comment

0 Comments