
போளூர் அருகே கருங்காலிக் குப்பம் கிராமத்தில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 19 மாணவர்களும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இதுதொடர்பாக சமையலர், உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கருங்காலிக் குப்பம் நடுநிலைப் பள்ளியில் 130 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் பலர், பள்ளியில் நேற்று பிற்பகல் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது, உணவில் பல்லி இருந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அந்த பல்லியை எடுத்து சமையலரிடம் மாணவர் புருஷோத்ராஜ் கொடுத்துள்ளார். இதையடுத்து, மாணவர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் வழங்கப்பட்ட உணவை 19 மாணவர்கள் சாப்பிட்டனர். இதனால் அவர்கள் அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cGlrlF
0 Comments