
தூத்துக்குடி- திருநெல்வேலி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலான பேருந்துகள் இடைநில்லா பேருந்துகளாகவே இயக்கப்படுகின்றன. ஒருசில பேருந்துகள் மட்டுமே சாதாரண பேருந்துகளாக இயங்குகின்றன. அந்த பேருந்துகளும் முறையாக அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் தடம் எண் 150 சாதாரண பேருந்தில் நேற்றுமுன்தினம் மதியம் கல்லூரிஉதவி பேராசிரியர் ஒருவர் வசவப்பபுரத்துக்கு ரூ.25 டிக்கெட் எடுத்துபயணித்துள்ளார். வசவப்பபுரம் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் உதவி பேராசிரியர் எழுந்து இறங்கமுற்பட்டுள்ளார். ஆனால், பேருந்து ஓட்டுநர் மற்றொரு பேருந்தை வேகமாக முந்திச் செல்வதில் குறியாக இருந்ததால் அங்கு நிறுத்தவில்லை. நடத்துநரிடம் விசில் அடிக்குமாறு உதவி பேராசிரியர் கூறியிருக்கிறார். அதற்கு அவர் “ஓட்டுநரிடம் சென்றுகூறுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CO8KQj
0 Comments