
காஞ்சிபுரம் மாநகராட்சி 27-வது வார்டு திருக்காலிமேடு பகுதியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடந்த 2007-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. புதிய உயர்நிலைப் பள்ளிக்கு அவசர கதியில் அதேப் பகுதியில் உள்ள சின்ன வேப்பங்குளத்தின் கரையில் 2 வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.
இங்கு, தற்போது 125 மாணவர்கள், 97 மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடங்கள் குளத்தின் கரையில் கட்டப்பட்டுள்ளதால் விரிவுப்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் பள்ளி கட்டிடத்தின் அஸ்திவாரம் தண்ணீரால் சேதமடையும் வருவதாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்த முடியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments