
‘வங்கிகளின் சங்கமம்’ என்ற கடன் வழங்கும் விழாவில், 3,075 பயனாளிகளுக்கு ரூ.194 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூரில் ‘வங்கிகளின் சங்கமம்’ என்ற வாடிக்கையாளர் சந்திப்பு மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தொழிற்கடன்,வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன்,கல்விக் கடன், தனிநபர் கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுகடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் மூலம் 3,075 பயனாளிகளுக்கு ரூ.194 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments