
இலங்கை கடற்படையால் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட மீனவரின் சடலத்தைப் பெறுவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சர்வதேச எல்லைக்கு 2 விசைப்படகுகளில் அலுவலர்கள், மீனவர்கள் என 11 பேர் கொண்ட குழுவினர் இன்று (அக்.23) புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ் மகன் ராஜ்கிரண் (30), சுதாகர் மகன் சுகந்தன் (30), அருளானந்தன் மகன் சேவியர் (32) ஆகிய 3 பேரும் ஒரு படகில் சுமார் 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் அக்டோபர் 19-ம் தேதி மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments