
கடந்த இரண்டு வருடத்தில் குழந்தைகளின் கல்வி சிதைந்து போய்விட்டது. இந்தத் தலைமுறை, கல்வியைக் காணாத தலைமுறை ஆகிவிடுமோ என்ற அச்சத்திலேயே பள்ளிகளைத் திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் இன்று (அக் 23) நடைபெறும் ஆறாவது தடுப்பூசி சிறப்பு முகாமை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் பார்வையிட்டுப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments