13வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!






இன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தினம். இதை முன்னிட்டு இன்று செங்கோட்டையில் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி 13வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார்.
செங்கோட்டையில் சுதந்தர தினம் கொண்டாட்டம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது.
தேசியக் கொடியேற்ற நிகழ்வானது, 1721 ஃபீல்ட் பேட்டரி (செரிமோனியல்) பீரங்கி வீரர்களின் 21 குண்டுகள் முழங்கியதோடு ஒருங்கிணைக்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 105மிமீ இலகுரக களப் பீரங்கிகளைப் பயன்படுத்தும் இந்த செரிமோனியல் பேட்டரிக்கு மேஜர் பவன் சிங் ஷெகாவத் தலைமை தாங்குகிறார். இதன் பீரங்கி நிலை அதிகாரியாக நாயப் சுபேதார் (பீரங்கியியல் உதவிப் பயிற்றுவிப்பாளர்) அனுதோஷ் சர்க்கார் உள்ளார்.
செங்கோட்டையில் பிரதமர் மோடி!
இன்று காலை பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். மேலும் போர் நினைவிடம் சென்றும் மரியாதை செலுத்தினார்.
தற்போது அவர் செங்கோட்டைக்கு வந்திருக்கிறார். அவருக்கு முப்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.!
#WATCH | Prime Minister Narendra Modi pays floral tributes to the Father of the Nation, Mahatma Gandhi, at Rajghat on the 80th Independence Day
— ANI (@ANI) August 15, 2026
(Video source: PM Modi/ YouTube) pic.twitter.com/xIcfLPeDol
இன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தினம். இதை முன்னிட்டு இன்று செங்கோட்டையில் கொடியை ஏற்றி உரையாற்றுகிறார் இந்திய பிரதமர் மோடி.
டெல்லியில் நடக்கும் சுதந்திர தின விழா நிகழ்வுகள் மற்றும் மோடியின் உரையை இந்த Live Blog-ல் தெரிந்துக்கொள்ளலாம்.
from India News https://ift.tt/yLK5fT4
0 Comments