செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு!
அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி, பண மோசடி செய்ததாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. முதலில் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28-ம் தேதி வரையில் நீதிமன்றக் காவல் வழங்கியது நீதிமன்றம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/9ff33a6f-18cf-419c-bb6f-07395174e2e2/648c9c3d51b91.jpg)
அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தும், அவர் சிகிச்சையில் இருந்ததால், அவரை தங்களால் விசாரிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 28-ம் தேதி , செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இன்று செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவு பெறுகிறது.
from India News https://ift.tt/1RjPyN0
0 Comments