
சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை இரண்டாகப் பிரித்து, தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய காவல் ஆணையரகம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், நிர்வாகம் (சென்னை) ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் எம்.ரவி, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து எல்லையும் வரையறை செய்யப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து 20 காவல் நிலையங்களைப் பிரித்து எல்லை வரையறை செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments