தடுப்பூசி செலுத்தினால்தான் ரேஷன் பொருட்கள்: ஒரு வாரத்தில் அமல்படுத்த திட்டம்

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தி யவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை ஒரு வாரத்தில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

ஒமைக்ரான் தடுப்பு முன் னேற்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மடீட்சியா அரங்கில் நேற்று நடந்தது. ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், சுகாதாரத் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments