நான்கு வழி சாலைகளின் நடுவே மேய்க்கப்படும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் மாடுகளும் அதன் உரிமையாளர்களும்.. வழக்கால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள்

நான்குவழி தேசிய நெடுஞ்சாலை களின் நடுவே மேய்க்கப்படும் மாடுகள் வாகனங்களின் அதிக சத்ததால் மிரண்டு திடீரென சாலையில் குதிக்கின்றன. இதனால் விபத்து ஏற்பட்டு மாடுகளும், அதன் உரிமையாளரும் விபத்தில் சிக்குகின்றனர். சாலையில் பயணிக்கும் வாகனமும் சேதமடைகிறது.

நான்குவழி தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவே, வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுக் காற்றை உள்வாங்கவும், இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பில் உள்ள விளக்குகளின் எதிரெதிர்வாகன ஓட்டிகளின் கண் கூச்சத்தை தடுக்கவும் நெடுஞ்சாலைத்துறை கார்பன்டை ஆக்ஸைடை உள்வாங்கும் செடி வகைகளை வளர்த்துவருகிறது. அவ்வாறு வளர்க்கும் போது மாடுகள் விரும்பி உண்ணும் புற்களும் வளர்கின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் புற்களையும், செடிகளையும் பராமரிக்கவும் ஒப்பந்த பணிகள் மூலம் நெடுஞ் சாலைத் துறை அவற்றைக் கட்டுப் படுத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments