சாதி வேறுபாடுகளைக் களைந்து அனைத்து கிராமங்களிலும் பொது மயானம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சாதி வேறுபாடுகளைக் களைந்து தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் பொது மயானம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர்கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, மாலா ராஜாராம் ஆகியோர் சார்பில் கோகுல கண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர்கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தில் இறந்த நபர்களின் உடல்களை ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்து வருகின்றனர். அந்த ஓடை புறம்போக்குக்கு அருகில் எங்களுடைய நிலம் இருப்பதால், அருந்ததியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் 

Post a Comment

0 Comments