
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியைச் சேர்ந்தவர் சஞ்சித் (26). ஆர்.எஸ்.எஸ் தொண்டர். இவர், கடந்த 15-ம் தேதி பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ஆயுதங்களால் சஞ்சித்தை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சஞ்சித், அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சித் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பாலக்காடு மாவட்ட போலீஸார் கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் தொடர்புடைய மூவரை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும் சிலரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p1J5i0
0 Comments