
அட்சயப் பாத்திரா திட்டப் பணிகள் முடிய ஒரு மாதம் ஆகும் என்பதால், மத்திய சமையல் கூடம் மூலம் வரும் 8-ம் தேதி முதல் மதிய உணவு தரப்படவுள்ளது.
புதுச்சேரியில் கரோனா பரவலையொட்டிக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறவில்லை. அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டனர். கரோனா பரவல் குறைந்ததால் கடந்த செப்டம்பரில் 9 முதல் 12-வது வரை வகுப்புகள் தொடங்கின. நெடுந்தொலைவில் இருந்து குழந்தைகள் வந்தாலும் கரோனாவைக் காரணம் காட்டி மதிய உணவு தரப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments