
தீபாவளி தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மலைச்சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதமான தட்ப வெப்பநிலையைச் சுற்றுலாப் பயணிகள் கண்டும், உணர்ந்தும் ரசித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார விடுமுறையுடன் சேர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி முடித்த மக்கள், கொடைக்கானல் நோக்கி வரத் தொடங்கிவிட்டனர். இன்று காலை முதலே மலைச்சாலையில் கொடைக்கானல் நோக்கி வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments