திருவாரூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்: சமூக ஆர்வலர்கள் கவலை

திருவாரூர் மாவட்டத்தில், அண்மைக்காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நீடாமங்கலம் கடைவீதியில் நவ.10-ம் தேதி அன்று பட்டப்பகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தமிழார்வன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதேபோல, காட்டூரில் நவ.14 அன்று ரவுடி குமரேசன் கொலை செய்யப்பட்டார். இருகொலை சம்பவங்களும் முன்விரோதம் காரணமாக நடந்துள்ளன.

மேலும், மே 5-ம் தேதி கிடாரங்கொண்டானில் குடும்பத் தகராறு காரணமாக கூலிப்படையை ஏவி சரக்கு வாகனத்தை ஏற்றி ஜெயபாரதி என்பவர் கொலை செய்யப்பட்டார். ஜூன் 19-ம் தேதி கூடூரில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள், அக்கட்டிட உரிமையாளர் தமிழரசனை கொலை செய்தனர். ஜூலையில் திருத்துறைப்பூண்டி அருகே ஆரியலூரில் வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி ரஜினி பாண்டியன் முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments