கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வாரத்துக்கு 6 நாள் நேரடி வகுப்பு: உயர்கல்வித் துறை அறிவிப்பு

கல்லூரிகள், பல்கலைக்கழகங் களில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதை அடுத்து கடந்த செப். 1 முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்பட்டன. இதற்கிடையே செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் தேர்வுக்கு போதிய காலஅவகாசம் அளிக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜன. 20-ம் தேதிக்குப் பின்னரே செமஸ்டர் தேர்வுகள் நேரடி தேர்வுகளாக நடத்தப்படும் என்றும் தேர்வுக்கு முன்பாக மாதிரி தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments