சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, குமரியில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் 2 பிரிவாக ஆய்வு: சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் 2 பிரிவாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு நடத்துகின்றனர்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்தன. தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments