தொடர் கனமழை எதிரொலி - 5 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் ஓட்டேரி ஏரி நிரம்பியது: உபரிநீரை வரவேற்று பொதுமக்கள் பூஜை

வேலூர் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த ஓட்டேரி ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நிரம்பியது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் வேலூர் நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக ஓட்டேரி ஏரி இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சிறப்பாக கட்ட மைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டும் வந்தது. 106 ஏக்கர் பரப்பளவுடன் சுமார் 140 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். ஏரிக்கு நாயக்கநேரி கால்வாய், குளவிமேடு கால்வாய், மாந்தோப்பு கால்வாய், கணவாய்மேடு கால் வாய், பாலமதி மலை, ஓட்டேரி மலையில் இருந்து வரும் மழை நீர்தான் முக்கிய நீர்வரத்தாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3FNAwOD

Post a Comment

0 Comments