தங்க இடமில்லாமல் தவிக்கும் இருளர் குடும்பங்கள்: ஊரை விட்டு வெளியேறும்படி மிரட்டல் வருவதாக புகார்

சுங்குவார்சத்திரம் அருகே 3 இருளர் குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வருகின்றனர். பொது இடத்தில் தங்கி இருந்த அவர்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாகவும், உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சுங்குவார்சத்திரம் அருகே இரண்டு வருடமாக 12-க்கும் மேற்பட்ட இருளர் சமுதாய மக்கள் ஆங்காங்கே பொது இடங்களில் டென்ட் அமைத்து தங்கி மரம் வெட்டுதல், மீன்பிடித்தல், விவசாய கூலி வேலைகளை செய்தல் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments