
பல்கலைக்கழக மானியக்குழு (யுசிஜி) உத்தரவுக்கு மாறாக அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. கட்டாயம் என அறிவித்ததால் பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், நூலகர்உள்ளிட்ட பதவிகளில் 352 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 13-ம் தேதி வெளியிட்டது. இந்தப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments