உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. கட்டாயம்; அண்ணா பல்கலை.யில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை: முதுநிலைப் பட்டதாரிகள், தனியார் கல்லூரி ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு

பல்கலைக்கழக மானியக்குழு (யுசிஜி) உத்தரவுக்கு மாறாக அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. கட்டாயம் என அறிவித்ததால் பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், நூலகர்உள்ளிட்ட பதவிகளில் 352 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 13-ம் தேதி வெளியிட்டது. இந்தப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments