
திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக திடீரென ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிச்சிவிளை ஊராட்சியில் மொத்தம் 827 வாக்குகள் உள்ளன. இதில், பட்டியல் இனத்தவர் வாக்குகள் 6 மட்டுமே உள்ளன. ஆனாலும், ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், பட்டியல் இனத்தை சேர்ந்த ராஜேஸ்வரி ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களது ஆட்சேபனையை வெளிப்படுத்தும் வகையில், வார்டு உறுப்பினர் தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments