பட்டியல் இனத்தவருக்கு தலைவர் பதவி ஒதுக்கீட்டை கண்டித்து பிச்சிவிளை ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் ஒட்டுமொத்த ராஜினாமா: ஊர் மக்களின் முடிவால் திருச்செந்தூர் அருகே பரபரப்பு

திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக திடீரென ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிச்சிவிளை ஊராட்சியில் மொத்தம் 827 வாக்குகள் உள்ளன. இதில், பட்டியல் இனத்தவர் வாக்குகள் 6 மட்டுமே உள்ளன. ஆனாலும், ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், பட்டியல் இனத்தை சேர்ந்த ராஜேஸ்வரி ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களது ஆட்சேபனையை வெளிப்படுத்தும் வகையில், வார்டு உறுப்பினர் தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments