காட்டுமன்னார்கோவில் அருகே விபத்தில் சிக்கிய தம்பதியரை மீட்ட அமைச்சர்

வீராணம் ஏரிக்கரை சாலையில் விபத்தில் சிக்கிய தம்பதியரை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

காட்டுமன்னார்கோவில் சகஜானந்தா நகரைச் சேர்ந்தவர் சேகர் (62). இவரது மனைவி சுலோச்சனா (58). இருவரும் இருசக்கரவாகனத்தில் வீராணம் ஏரிக்கரை சாலையில் நேற்று காலை சென்றனர். எதிரே வந்த வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சேகர்-சுலோச்சனா தம்பதியர் சாலையில் விழுந்து கிடந்தனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இதனை பார்த்து தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tRUq6x

Post a Comment

0 Comments