
திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்த டிஇஎஸ் ராகவன், தாகூரின் ‘கோரா’ என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்த கா.செல்லப்பன், தமிழில் சல்மா எழுதிய ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற நாவலை மராத்தியில் மொழிபெயர்த்த சோனாலி நவாங்குள் உள்ளிட்டோருக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தவும், எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு சாகித்ய அகாடமி அமைப்பு செயல்படுகிறது. இதன் சார்பில் 2020-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, யுவ புரஸ்கார் விருது ஆகியவை கடந்த ஆக.25-ம் தேதியும், பால் சாகித்ய புரஸ்கார் (சம்ஸ்கிருதம்) செப்.7-ம் தேதியும் வழங்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Ey85o9
0 Comments