மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் இன்று போராட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்றுவீடுகள் முன்பு கருப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தப்பட உள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலைஉயர்வு, விலைவாசி உயர்வு,பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CsbrqV

Post a Comment

0 Comments