
ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை தளர்த்தக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் 40 வயதைக் கடந்த பிஎட் பட்டதாரிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘நாங்கள் அரசிடம் வேலை கேட்கவில்லை. வேலைக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு தாருங்கள்’ என்று முதல்வர் ஸ்டாலினுக்கு உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தனர்.
கடந்த ஆண்டு வரை ஆசிரியர்பணிக்கான வயது வரம்பில் கட்டுப்பாடு கிடையாது. இந்நிலையில், ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டு கடந்த 30.1.2020 அன்று அரசாணைபிறப்பிக்கப்பட்டது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கு வயதுவரம்பு 40 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையைப் பின்பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9-ம் தேதி அன்று முதுகலை பட்டதாரி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EztCNh
0 Comments