
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011-13 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்து குவித்துள்ள
தாகவும், எனவே அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், முன்னாள் அமைச்சரான ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், நீதிபதி ஆர்.ஹேமலதா, காலம் கடந்து வழக்குப்பதிவு செய்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தும் மாறுபட்டு தீர்ப்பளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39miIfc
0 Comments