சென்னை மாநகராட்சி பதிவேடு, கல்வெட்டுகளின்படி மகாகவி பாரதி நினைவு தினமாக செப்.12-ம் தேதியை ஏற்க வேண்டும்: தமிழக அரசுக்கு பாரதி பற்றாளர்கள் கோரிக்கை

சென்னை மாநகராட்சி இறப்பு பதிவேடு மற்றும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளபடி, செப்டம்பர் 12-ம்தேதி மகாகவி பாரதியார் நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும். அந்த நாளிலேயே ‘மகாகவி நாள்’ கடைபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதி பற்றாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார். கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி என பன்முகங்களைக் கொண்டஅவர், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டில் 1921-ம்ஆண்டு செப்.12-ம் தேதி காலமானதாக பாரதியார் வாழ்க்கை குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kktAAx

Post a Comment

0 Comments