2005-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சட்டம்' நூறு சதவீதம் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக, புதிதாக ‘பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்ட மசோதாவை’ (விபி-ஜி ராம் ஜி) மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்த மசோதாவின் மூலம், இந்த திட்டத்துக்கான நிதிச் சுமையை மாநில அரசுகளுடன் 60-40 என்ற சதவீதத்தில் மத்திய அரசு பகிா்ந்துகொள்ளும் வகையில் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை 100 நாள்களாக இருந்த வேலை நாள்கள், இனி 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. இந்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயா் நீக்கம் மற்றும் மசோதாவின் அம்சங்களைக் கண்டித்து, அறிமுக நிலையிலேயே எதிா்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. இந்த மசோதா, கிராம சபைகளின் உரிமையைப் பறிப்பதுடன், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை உருவாக்குகிறது. இந்த திட்டம் ஏழைகள் விரோத, தலித் விரோத நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
நேற்று காலை 11 மணிக்கு கூடிய மக்களவையில், புதிய ஊரக வேலைவாய்ப்புச் சட்ட மசோதாவுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். மேலும், அவையின் மையப் பகுதியில் கூடிய எதிா்க்கட்சி எம்.பி.க்கள், திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயா் நீக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா். மேலும், மசோதா நகலைக் கிழித்து எறிந்தனா்.
அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினா் கே.சி.வேணுகோபால், ‘மசோதாவை நாடாளுமன்றக் குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்’ என்று கோரினாா்.
ஆனால், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் அமளி தொடா்ந்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவித்தாா்.
மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாநிலங்களவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. நள்ளிரவு வரை நீண்ட விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பலா் வெளிநடப்பு செய்து, நாடாளுமன்ற வளாகத்தில் தா்ணாவில் ஈடுபட்டனா்.
from India News https://ift.tt/D63hPL7
0 Comments