சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் - குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவு பிறப்பிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

அதேபோல மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல், ஆந்திர மாநில ஆளுநராக இருந்த ஹரிச்சந்தன் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர் ஆந்திர மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இல.கணேசன்

மேலும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிராவுக்கும், சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூருக்கும், இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர், பீகாருக்கும், பீகார் மாநில ஆளுநர் சௌஹான், மேகாலயாவுக்கும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.



from India News https://ift.tt/6SJRDqf

Post a Comment

0 Comments