கர்நாடகா: தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்த பாஜக; காதில் பூவோடு சட்டசபைக்கு வந்த சித்தராமையா

பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் இந்தாண்டு மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான திட்டமிடலும் ஒருபக்கம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கவிழ்ந்த பிறகு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, இன்று தனது கடைசி பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தது. மேலும் நிதித்துறையையும் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் பசவராஜ் பொம்மை , இந்த பட்ஜெட்டை வாசித்தார்.

சித்தராமையா

இதற்கிடையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலர் காதில் பூ வைத்துக்கொண்டு சட்டசபைக்கு வந்து, பா.ஜ.க-வின் பட்ஜெட்டை மறைமுகமாக விமர்சித்தனர்.

அதோடு காங்கிரஸ் இந்த பட்ஜெட்டை, `காதில் பூ' என்றும் கூறுகிறது. பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் சித்தராமையா, `ஆளுங்கட்சி தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 600 வாக்குறுதிகளில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது' என பலமுறை சாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பசவராஜ் பொம்மை

இருப்பினும் பசவராஜ் பொம்மை, இன்றைய பட்ஜெட் தாக்கிலின்போது, தங்களின் வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அரசு வெளியிடும் என்று தெரிவித்தார்.



from India News https://ift.tt/MvSxWRV

Post a Comment

0 Comments