5 ரூபாய்க்காக வந்த வாக்குவாதம்: ஓடும் ரயிலிலிருந்து தூக்கிவீசப்பட்ட இளைஞர் - தேடப்படும் குற்றவாளிகள்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரவி யாதவ் (26) தனது சகோதரியுடன் கடந்த சனிக்கிழமை ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்திருக்கிறார். ரயில் ஜிரோலி கிராமம் அருகே வந்தபோது, ரயில் ஊழியர் ஒருவரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கியிருக்கிறார். 15 ரூபாய் தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வேண்டுமென அந்த ஊழியர் கேட்டிருக்கிறார். மேலும், பாண் மசாலா போட்டுக்கொண்டு ரயிலிலேயே துப்பிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரவி யாதவ், ``தண்ணீர் பாட்டிலில் 15 ரூபாய் எனத் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, 15 ரூபாய் தான் தருவேன்" எனப் பேசியிருக்கிறார். மேலும், பான் மசாலா எச்சில் துப்பியது தொடர்பாகவும் கேட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாக சொல்லப்படுகிறது.

தண்ணீர் பாட்டில்

இந்த சூழலில், ரவி யாதவ், அவரின் சகோதரியுடன் லலித்பூர் ஸ்டேஷனில் இறங்க முயன்றபோது, ரயில் ஊழியர் தன்னுடன் பணிபுரியும் சிலரை அழைத்துக்கொண்டு அவர்களை இறங்கவிடாமல் தடுத்துள்ளனர். மேலும், ரயில் லலித்பூர் ஸ்டேஷனை கடந்ததும் ஓடும் ரயிலிருந்து ரவி யாதவை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்கள். ஓடும் ரயிலிலிருந்து தூக்கிவீசப்பட்டதால், பலத்த காயமடைந்த ரவி யாதவவை உள்ளூர் மக்கள் மீட்டு ஜான்சி மருத்துவக் கல்லூரியில் அனுமதித்திருக்கிறார்கள்.

ரயில்

அவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரவி யாதவ் சகோதரியின் புகாரின் அடிப்படையில், ரயில் ஊழியர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 323 (தன்னிச்சையாகக் காயப்படுத்துதல்), 325 (கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை காவல்துறை தீவிரமாகத் தேடிவருகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/WN2JdjG

Post a Comment

0 Comments