பாசன குளம் அருகே குப்பைகள் கொட்டும் அவலம்: நிலங்கள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் தவிப்பு

புதுச்சேரியில் பாசனகுளத்தின் அருகிலேயே குப்பைகள் கொட்டப்படு கின்றன. இதனால் விவசாய நிலங்கள் பாதிப்படைகின்றன. இதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளே கண்டுகொள்ளாததால் விவசாயிகள் தவிக்கின்றனர்.

புதுவை மாநிலம் பாகூர், குருவிநத்தம், கிருமாம்பாக்கம், கன்னியக் கோயில், மணப்பேட்டை, மதிகிருஷ் ணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 10 கிராமங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள், உச்சிமேடு தாங்கல் ஏரிக்கரையில் இருந்து 10-15 மீட்டர் தொலைவில் நெற்பயிர்களை ஒட்டியுள்ள நிலங்களில் கடந்த இரு மாதங்களாக முழு வீச்சில் கொட் டப்பட்டு வருகின்றன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments