
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு கோரிய நபரை தொண்டர்கள் தாக்கி விரட்டியடித்ததால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 1-ம் தேதி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் அடிப்படை உறுப்பினர்கள் ஒரே வாக்கில் இணைந்தே தேர்வு செய்யும் வகையில் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments