நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் காலமானார்: முதல்வர் ஸ்டாலின், மருத்துவத் துறையினர் இரங்கல்

நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் காலமானார். அவருக்கு வயது 98. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் 1923-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பிறந்தவர் சாரதா மேனன்.நீதிபதியாக இருந்த இவரது தந்தைசென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், பள்ளிக் கல்வியை சென்னையில் முடித்தசாரதா, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். பின்னர் பெங்களூருவில்உள்ள தேசிய மனநல, நரம்பியல்கல்வி மையத்தில் பயிற்சி பெற்றார். இதையடுத்து, நாட்டின் முதல்மனநல மருத்துவர் என்ற பெருமை பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments