
அழிந்துவரும் மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து நாடுகளும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக மண் தினத்தை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நம் உடலுக்கு மூலமான உயிருள்ள இம்மண், முழு அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இதனை மிகுந்த அவசரத்துடன் அணுகுவது, எல்லா தேசங்களும் நிறைவு செய்ய வேண்டிய மிக முக்கிய பொறுப்பாக இருக்கிறது. நாம் இதனை நிகழச்செய்வோம்” எனக் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments