
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (34). இவர், தனியார் செல்போன் கோபுரம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பணி நிமித்தமாக வேலூர் சேண்பாக்கம் நேதாஜி சாலையில் உள்ள வாடகை கட்டிடத்தில் முரளி கிருஷ்ணன் அறை எடுத்து தங்கியிருந்தார். அந்த அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது நேற்று முன்தினம் இரவு தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், வேலூர் வடக்கு காவல் துறையினர் விரைந்து சென்று முரளிகிருஷ்ணன் உடலை மீட்டனர். அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரித்தபோது, ‘பிட் காயின்’ எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.45 லட்சம் அளவுக்கு முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளார். அவரது குடும் பத்தினர் அந்த கடனை அடைத் துள்ள நிலையில், மீண்டும் ரூ.5 லட்சம் அளவுக்கு முதலீடு செய்து ஏமாந்துள்ளார். இதனால், வேதனை அடைந்த முரளி கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments