சட்டப்பேரவை நிகழ்வு நேரலை, நவீனமயமாக்க பணிகள்: பேரவைத் தலைவர் அப்பாவு ஆலோசனை

சட்டப்பேரவையின் அன்றாட நிகழ்வுகளை நேரலை செய்வது, பேரவை நடவடிக்கைகளில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டப்பேரவை கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை அரங்கில் நடத்தப்பட்டது. அப்போது கரோனா பரவல் அதிகரித்த நிலையில், பேரவைக் கூட்டம் பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு, 2020-ம் ஆண்டு இறுதியில், சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள கூட்ட அரங்கில் பேரவைக் கூட்டம்நடைபெற்றது. தொடர்ந்து இந்தஆண்டுக்கான ஆளுநர் உரையும், இடைக்கால பட்ஜெட், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 16-வதுசட்டப்பேரவைக்கான உறுப்பினர் பதவியேற்பு, பேரவைத் தலைவர் தேர்வு, பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை கலைவாணர் அரங்கிலேயே நடைபெற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments