வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.62 கோடி மோசடி: ஓட்டப்பிடாரம் அருகே சங்க தலைவர், செயலாளர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வள்ளிநாயகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.62 கோடிமோசடி செய்ததாக, அந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.

ஓட்டப்பிடாரம் அருகே வள்ளிநாயகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கே.சண்முகபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தலைவராக சுப்புராஜ், செயலாளராக வேல்முருகன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். சங்கத்தில் நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கோவில்பட்டி கூட்டுறவு சங்க துணைப் பதிவாளருக்கு புகார்கள் வந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments