போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் மாறிய வெங்கச்சேரி தரைப்பாலம்

காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறியுள்ளது. வெள்ளம் வடிந்த பிறகு அதை சீரமைக்காமல் போக்குவரத்துக்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாலம் கடந்த 2015-ம்ஆண்டு பெய்த கனமழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்தது. பின்னர் மணல் மூட்டைகள் போடப்பட்டும், பக்கவாட்டில் சவுக்கு மரக் கழிகளைக் கொண்டுகட்டப்பட்டும் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cTTLcM

Post a Comment

0 Comments