பழங்குடியினர் பெருமை வாரத்தை முன்னிட்டு மாணவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்: ஏழைகளுக்கு உதவ வேண்டும் என அறிவுரை

பழங்குடியினர் பெருமை வாரத்தைமுன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையில் பழங்குடியினப் பள்ளிகளின் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பழங்குடியினத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பகவான்பிர்சா முண்டாவின் 146-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் அவரைப்போன்ற தலைவர்களின் பங்களிப்புகள், தியாகங்களை நினைவுகூரும் வகையில் பழங்குடியினர் பெருமை வாரம் கொண்டாடப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30WN1sj

Post a Comment

0 Comments