
பழங்குடியினர் பெருமை வாரத்தைமுன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையில் பழங்குடியினப் பள்ளிகளின் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பழங்குடியினத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பகவான்பிர்சா முண்டாவின் 146-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் அவரைப்போன்ற தலைவர்களின் பங்களிப்புகள், தியாகங்களை நினைவுகூரும் வகையில் பழங்குடியினர் பெருமை வாரம் கொண்டாடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30WN1sj
0 Comments