கார்த்திகை தீப திருநாளில் சிவாலயங்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீப திருநாளையொட்டி காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் மகாதீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மலைக் கோயில்களில் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை வழிபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள மலைக்கோயிலில் சுயம்பு மூர்த்தியாக வேதகிரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனால், மாதா மாதம் வரும் பவுர்ணமி நாட்களில் இங்கும் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இந்நிலையில், கார்த்திகை மாத தீபத் திருநாள் விழா நேற்று நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல், சுவாமி வீதியுலாவும் ரத்து செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments