நீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ளது பூண்டி ஏரி. சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான இந்தஏரிக்கு, மழையின் காரணமாக அதிக அளவில் நீர் வந்து கொண்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 10-ம்தேதி முதல் உபரிநீர், கொசஸ்தலையாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு ஆயிரம் கன அடிஎன வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு, நீர் வரத்தின் அளவை பொறுத்து, அவ்வப்போது அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments