
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரப்பகுதியில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் அமைந்துள்ளன. இக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ரிஷப தீர்த்தக் குளம் பக்தர்கள் நீராடும் புண்ணிய தீர்த்த குளமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையில் ரிஷப தீர்த்தக் குளம் முழுமையாக நிரம்பி வழிவதால், மூலவர் பிரகாரம்உட்பட கோயில் வளாகம் முழுவதும் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments