
மானாமதுரை அருகே பாலத்தின் மீது கார் மோதியதில் கோவையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
மானாமதுரை அருகே உள்ள தெற்கு சந்தனூர் நெடுங் குளத்தைச் சேர்ந்தவர் அய்யப் பன்(40). இவர் கோவை சேரன் மாநகரில் உணவகம் நடத்தி வந் தார். இதனால் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 9 பேருடன் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு காரில் நேற்று சென்றார். காரை குமார்(27) ஓட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments