
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்தசஷ்டி திருவிழா நாளை (4-ம் தேதி) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. நாளை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.
காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் வீரவாள் வகுப்பு, வேல்வகுப்பு பாடல்களுடன் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருள்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு சஷ்டி விரத மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக தங்கத்தேர் உலா ரத்து செய்யப்பட்டு உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments