தமிழக அரசை வலியுறுத்தி 8 நாட்கள் ஆர்ப்பாட்டம்; பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வரை போராடுவோம்: சென்னையில் நடந்த போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் வரியை குறைக்க வலியு றுத்தி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகம் முழுவதும் 8 நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி பாஜக இளைஞர் அணி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் நடந்தஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments